புரளி இல்லாத பரளிக்காடு !

வருடா வருடம், ஒரு உற்சாகப் பயணம் – மிட்கான்,ஜோன்கான் தவிர - ஜே.சி.ஐ. அமைப்பில் இருக்கும். இந்த முறை பரளிக்காடு போகலாம் என முடிவானது.

காரமடை ரங்கனாதர் ஆலயம் தாண்டி இட்துதிருப்பம். போய்கிட்டே இருந்தால் வெள்ளியங்காடு வரும். ஒரு செக் போஸ்ட்.. ( முன்னரே பதிவு செய்ய வேண்டும் ) அனுமதியுடன் நுழைந்தால் அப்புறம் ஒரு மனித தலை ரோட்டில் கிடையாது. அவசர ஆத்திரத்துக்கு......(அதெல்லாம் இங்கேதுக்கு?... ஒரு பேச்சுத் துணைக்கு..) நீங்கள் மட்டும்தான்.

ஊட்டி குந்தா போகும் வழியில் ஒரு சரேல் திருப்பத்தில் இந்த அணை இருக்கிறது. இன்னும் ரொம்ப பிரபலமாகவில்லை போலும். கூட்டம், கட்டுப்பாட்டில்.

போன உடனே ஒரு ‘சுக்கு காபி’ வெல்கம் ட்ரிங்க் கொடுத்தார்கள்.
இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என யொசிப்பதற்கும் தீர்ந்துவிட்ட்து.


"பாட்டுத்தோழர் - சங்க செயலர் சதீஷ்"
எனது இல்லாள் - பாதுகாப்பாய் !

சரி, பரவாயில்லையென படகு சவாரி. பரவாயில்லை, ஊட்டி, கொடைக்கானலை விட அதிக தொலைவு அழைத்துப் போகிறார் படகோட்டி.





படகு பயணம் - எங்களின் இன்னொரு குழு !
சின்ன ட்ரெக்கிங் !





              

பரிசல் நண்பர்கள் !
"ஏங்க இங்க குதிச்சு நீச்சல் அடிக்கலாமா?’ என்றோம். : முதல்ல “ வெறும் கையை மட்டும் நனைச்சுப் பாருங்க என்றார்” . நனைத்தால் ‘ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்! வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்!’
.
பரிசலில் சப்தம் போட்டு பாடிக்கொண்டே வந்தோம். ஊருக்குள்லதான் நம்மலை ஒரு பய பாட விடறதில்லையே ?  சூப்பர் சிங்கர்ல கூட உள்ள நுழைய விடலையே ?  நம்ம குரல் அப்படி !

பாடி முடித்து.....சே....படகு சவாரி முடிந்து, திரும்பி வந்த்தும், வனதுறையினரே மதிய                                                       உணவு செய்து தருகிறார்கள்.
சாப்பாடு வரிசை....


“ ஏம்மா, எதுக்கு ரெண்டு தடவை ‘கொத்தமல்லி’ எழுதியிருக்கே?” என அதட்டி விசாரித்துக் கொண்டிருந்தார் அலுவலர்.
உணவு துறை !
அந்தம்மா அதட்டப்படாமல், “சாரே. அது கொழம்பு மல்லி, இது சட்னி மல்லி” என விளக்கம் கொடுத்தார்.

ஒரு இனிப்பு, ஒரு சப்பாத்தி, கொஞ்சம் பிரியாணி, ராகி களி உருண்டை, தயிர் சாதம் என கலக்கலான மதிய உணவு. அசைவ பிரியர்களுக்கும் தனி கவனிப்பு. எல்லாமே அன்-லிமிட்.

சாப்பிட்ட பின், தேன் மாதிரியான ஒரு ரஸ்தாளிப்பழம்- துக்குனியூண்டு சைசில்  செம ருசி. எவ்வளவு கேட்டாலும் தருகிறார்கள்.

தின்னது செரிக்கனுமே ,வேட்டை தடுப்பு பிரிவின் துணையுடன் ட்ரெக்கிங்!
யானை லத்தி, காட்டெருமை கால்தடங்கள்...என பய பக்தியுடன் நடந்தோம். “ ஏங்க, இங்க யானை பாக்க முடியுமா?” எனக் கேட்டேன். காவலர் சொன்னார், “ அதை பாக்கக் கூட்டாதுன்னுதான் நாங்க வரோம்”

அருவியோரம் நடைப்பயணம் - வைகோ வரவில்லை !
ஜில் குளியல்
அருமையான ஆத்தோர பயணம். 3 கி.மீ. நடந்த்தே தெரியவில்லை. ஒரு சின்னப் பாப்பா,  நடந்தே வந்த்து.
நடந்த களைப்பு தீர குளியல். ஐஸ் டிகிரியில் ஓடும் தண்ணீர். இன்னும் கொஞ்ச நேரத்தில் உறந்துவிடுவோமே என்கிற நிமிஷத்தில் மேலேறி உடை மாற்றினோம்.  

நல்ல சளியுடன்தான் அங்கே குளித்தேன். சளி போயே போச் !  

திரும்பி வரும் வரும் வழியில் சின்ன கிராமம்.
“ இந்த கோழி விக்கிறதா?” என வியாபார விசாரணைகள் போட்டுக் கொண்டே வந்தார்கள் எங்கள் நாட்டுகோழி ரசிகர் மன்ற கண்மணிகள்.



9 மணிக்கேல்லாம் ஈரோடு வந்துவிட்டோம்.


மறுபடி பார்க்க ஆசைப்படும் இடங்களில் பரளிக்காடும் ஒன்றாகிவிட்ட்து.

தினசரி போன் கால் ( அங்கே வொடாபோன், ஏர்டெல், ஏர்செல் மட்டும்தான் ), டீசல் சுவாசம்,
சொந்த ஊரு வெயில் ..இதெல்லாம் மறந்து வரலாம் !














Comments

Popular Posts