"என் இனிய இயந்திரா" - சீசன் 2

19.07.2013 வெள்ளி அன்று, குமாரபாளையம் போகும் வழியில் பள்ளிபாளையம் தாண்டி திடீரென்று என் ஸ்ப்ளென்டர் சைலன்சரில் புகை கக்க ஆரம்பித்து விட்டது.

‘கப்,கப்’ என்று டீசல் எஞ்சின் சப்தம் வேறு ! ஓரமாய் நிறுத்திவிட்டு, கவலையோடு வண்டியை பார்த்தேன். 2003 ஆம் ஆண்டில் வாங்கியது. பத்து வருஷம் ஆகிவிட்டது. இன்று 2013 !

இம்மாதிரி எல்லாம் என் வண்டி நடு ரோட்டில் காலை வாரியதாக சரித்திரமே கிடையாது.

‘ஆயுசு அவ்வளவுதானோ’ என்று கவலையுடன், நண்பருக்கு தொலைபேசி னேன். அவர் தனது காரில் வந்து என்னை அழைத்துப் போனார். எனது ஸ்ப்ளென்டரை அங்கேயே ஓரமாக ஒரு மளிகை கடையில் சொல்லி நிறுத்திவிட்டுப் போனேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் இது மாதிரி ஒருனாள் மாலைவேளையில் ‘கிக்கர்’ வேலை செய்யாமல் போக, சில ‘ஹீரோ’க்கள் வந்து சரி செய்து தர ஈரோடு வந்து சேர்ந்தேன்.

இன்று எப்படியோ?

எனது வேலை முடிந்ததும் அவரே, கொண்டு வந்து என் ஸ்ப்ளென்டர் அருகில் என்னை இறக்கி விட்டு, “எதாவது வேன் புடிச்சு எடுத்துகிட்டு வண்டியை போயிரலாமா?” என்றார்.

இதுவரை அப்படி தூக்கிப் போக வைக்காத என் செல்லம் இப்ப மட்டும் அப்படி செய்யுமா? ஈரோடு MSK customer care-க்கு சொல்லிவிட்டு சாவியை போட்டு உதைத்தேன். ஸ்டார்ட் ஆனது, கியர் போட்டு பார்த்தேன், நகர்ந்தது, நகர்த்தினேன், ஓடியது. மெதுவாகவே ( எதுக்கு வம்பு ?) நண்பரிடம் நன்றியை கொடுத்துவிட்டு நேராக MSK வந்து சேர்ந்தேன்.

“ ஒண்ணுமில்லை சார், சைலன்சரில் சின்ன ஆயில் அடைப்பு, கிளீன் பண்ணா சரியாயிடும், ஏப்பா, வொயிட் ஸ்மோக்குன்னு கம்ப்ளெயின்ட் எழுதி எடுத்துக்க” என்று விட்டு சர்வீஸ் எஞ்சினியர் போக என் வண்டி அடுத்தா நாள் புதுசாக ( இன்ன பிற எல்லா சர்வீசும் செய்து ) என்னிடம்.


“ரியல்லி ஸ்பெளெண்டர் இஸ் ஒண்டர்தான்” 

Comments

Popular Posts