2014 என் வருடம்.

எனது பயிற்சி வாழ்வில் 2014 எப்படி இருக்கும் என்று  ஜனவரியின் 3-மாம் தேதியிலேயே தெரிந்து விட்டது.

அதை பரிட்சிக்காமல் வெளியில் சொன்னால் 'கூத்து' மாறிப்போய்விடலாம் என காத்திருந்து கண்டுபிடித்து விட்டேன்.

 எனது பயிற்சி வாழ்வின் குரு என நான் எண்ணுவது JC R.S பிரபு அவர்களைத்தான்......(மன்னிக்கனும் அவர்களையும்தான் என திருத்தி
 வாசிக்கவும். இன்னும் இருவர் லிஸ்டில்)

பிரபு அவர்களுக்காக நான் எடுத்துக்கொடுத்த வகுப்புகளுக்கு அவர் தனது நிறுவனத்தின் காசோலைதந்துள்ளார்.

அவைகள் வழக்கம் போல செலவழிக்கப்பட்டு விட்டன.

ஆனால் அவரது அக்கவுண்டிலிருந்து வருட ஆரம்பத்தில் அவர் கொடுத்த காசோலையை செலவு செய்ய மனம் வரவில்லை.

செலவு பண்னலாமா? எனது 2014  புரிந்தும் விட்டது.  ஒரே பிசி...!

எதென்ன,  50 ரூவா?  விருதாச்சலத்தில் ஒரு பெரியவர்,  "தம்பி நல்லா நல்ல கருத்து சொல்றீங்க......நீங்க நல்லா வருவீங்க" என வாழ்த்தி இந்த பணத்தை அளித்தார்.



அந்த தாத்தா....! 

வாழ்த்துக்களால் தானே வளருகிறோம் ?

ரெண்டையுமே வாழ்த்தாகத்தான் பார்க்கிறேன்........




Comments

Popular Posts