மழை போலும் மோகம் !



வெளிச்சக் கணவனை விட்டுப் பிரிந்த
இருட்டு மனைவியின்
மோகக் கதறல் !

அனிச்ச மலரினும்
மெல்லியலாள், அவளின்
மருட்டும் குரலின் சின்னச் சோகம்.

இடியும் மின்னலுமாய்
வீட்டின்
படியில் தெரியும்
வெளிச்சப் புகையினுள்
கொஞ்சம் தெரியும் அவளின்
கெஞ்சல் சிரிப்பு !


வானத்தை கிழித்த
மின்னல் கோடுகளால்
மனத்தை கிழிக்கும்
வெறித்த பார்வை.

தூரல் என்பதே
மழையின் தொடக்கம்தான்.
சாரல் வரவில்லை-
சாமி அதை தரவில்லை..

சிக்கல் சிக்கலாய்
சிந்தித்த இரவு
இறந்து போய் விடியல் வெளிச்சம்.

விடிந்தபின்னும்
மழை மட்டும் வரவே இல்லை.

Comments

Popular Posts