மழை போலும் மோகம் !
வெளிச்சக் கணவனை விட்டுப் பிரிந்த
இருட்டு மனைவியின்
மோகக் கதறல் !
அனிச்ச மலரினும்
மெல்லியலாள், அவளின்
மருட்டும்
குரலின் சின்னச் சோகம்.
இடியும்
மின்னலுமாய்
வீட்டின்
படியில் தெரியும்
வெளிச்சப் புகையினுள்
கொஞ்சம் தெரியும்
அவளின்
கெஞ்சல் சிரிப்பு
!
வானத்தை கிழித்த
மின்னல் கோடுகளால்
மனத்தை கிழிக்கும்
வெறித்த பார்வை.
தூரல் என்பதே
மழையின்
தொடக்கம்தான்.
சாரல் வரவில்லை-
சாமி அதை
தரவில்லை..
சிக்கல்
சிக்கலாய்
சிந்தித்த இரவு
இறந்து போய்
விடியல் வெளிச்சம்.
விடிந்தபின்னும்
மழை மட்டும் வரவே
இல்லை.
Comments