இனி ஒரு ஜேசிய கீதம் !

தேசியகீதத்தின் தேவைகள் தீர்ந்தன. பாதையில் இல்லை – பாரதத்தாயின் பார்வை இப்போது ! மாறாய் பாதைமாறுகிற பாதங்களைத்தான் பார்க்கிறால் எப்போதும் ! வழியெங்கும் நெம்புகோல்களே நிரம்பிக்கிடகின்றன; குறுக்கே கிடந்த குறுங்கற்களை நகர்த்திமுடித்த அவை நல்லதுதான். சரி...... இனியாவது, பாதணிகளை செப்பனிட ஊசிகள் தேடுவோம். • * * * * * நாட்டுக்குள் அத்தனை பேருமே நாட்டாமைகள் என்றால் வீதியில் இறங்கி வெளிச்சம் பெருக்க சாதி பார்க்காத சமத்துவர்கள் எத்தனை பேர் ? தேசியகீதத்தின் தேவைகள் தீர்ந்தன. இனி, ஜேசிய கீதம் இசைக்கப் பழகுவோம். அனிச்சப்பூவாய் அகம் , முகம் மலர வெளிச்சம் பெருக்க வீதியில் இறங்குவோம் ! மகத்தான சேவையாம் மானிட சேவையில் மனதை வைப்போம் ! பூமியின் பெருஞ்செல்வம் பூத்தவனின் ஆளுமையே என பூரிப்பெய்துவோம் ! தனிமனிதனுக்கு தலைவணங்கா சட்டங்களே சரியான அரசின் சின்னமென சிந்தனையில் கொள்வோம் ! தடையில்லா பொருளாதாரமே தனக்கான வியாபாரமென தனிமனைத நீதி தழைக்கச் செய்வோம் ! தேசங்கள் மீதான கோடுகளை சகோதரத்துவம் கொண்டு சரித்திடுவோம் ! கடவுளின் மீதான கவனமே குறிக்கோளும், பொருளுமாய் நம்பிக்கை தருமென கூவி நிற்போம் ! இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் ! Jc. Du.VELUMANI , ZONE TRAINER JCI ERODE TEXCITY ரிதம் 17 - Official Bulletin of Zone 17 க்காக எழுதப்பட்டது.

Comments

Popular Posts