இனி ஒரு ஜேசிய கீதம் !
தேசியகீதத்தின்
தேவைகள் தீர்ந்தன.
பாதையில் இல்லை –
பாரதத்தாயின்
பார்வை இப்போது !
மாறாய்
பாதைமாறுகிற பாதங்களைத்தான்
பார்க்கிறால் எப்போதும் !
வழியெங்கும் நெம்புகோல்களே
நிரம்பிக்கிடகின்றன;
குறுக்கே கிடந்த குறுங்கற்களை
நகர்த்திமுடித்த அவை
நல்லதுதான்.
சரி......
இனியாவது,
பாதணிகளை செப்பனிட ஊசிகள் தேடுவோம்.
• * * * * *
நாட்டுக்குள் அத்தனை பேருமே
நாட்டாமைகள் என்றால்
வீதியில் இறங்கி
வெளிச்சம் பெருக்க
சாதி பார்க்காத சமத்துவர்கள் எத்தனை பேர் ?
தேசியகீதத்தின்
தேவைகள் தீர்ந்தன.
இனி,
ஜேசிய கீதம் இசைக்கப் பழகுவோம்.
அனிச்சப்பூவாய்
அகம் , முகம் மலர
வெளிச்சம் பெருக்க
வீதியில் இறங்குவோம் !
மகத்தான சேவையாம்
மானிட சேவையில்
மனதை வைப்போம் !
பூமியின் பெருஞ்செல்வம்
பூத்தவனின் ஆளுமையே என
பூரிப்பெய்துவோம் !
தனிமனிதனுக்கு தலைவணங்கா
சட்டங்களே
சரியான அரசின் சின்னமென
சிந்தனையில் கொள்வோம் !
தடையில்லா பொருளாதாரமே
தனக்கான வியாபாரமென
தனிமனைத நீதி தழைக்கச் செய்வோம் !
தேசங்கள் மீதான கோடுகளை
சகோதரத்துவம் கொண்டு
சரித்திடுவோம் !
கடவுளின் மீதான
கவனமே
குறிக்கோளும், பொருளுமாய்
நம்பிக்கை தருமென
கூவி நிற்போம் !
இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம் !
Jc. Du.VELUMANI , ZONE TRAINER
JCI ERODE TEXCITY
ரிதம் 17 - Official Bulletin of Zone 17 க்காக எழுதப்பட்டது.
Comments