திரை உலகம் திரும்பிப்பார்த்த இயக்குனர் ‘பாலு’ ரெண்டு பேர்.
ஒன்று டி.என். பாலு. அவர் மசாலாக்காரர்.
இன்னிருத்தர் நமது தலைமுறையில் பாலு மகேந்திரா.
ஒளிப்பதிவாளராக இவர் நிவாஸ் வர்களின் போட்டியாளராக அடையாளம் காணப்பட்டாலும், தனது காலத்திய இளைய தலைமுறையின் ‘கில்லாடி’ ஒளிப்பதிவாலராக அடையாளம் காணப்பட்டார்.
கதையை நம்பி படம் எடுக்கும் சிலரின் விருப்ப ஒளியியக்குனராக விரும்பப்பட்டார்.
மகேந்திரனுக்கு பிறகு, அவரது பார்ட்னராக பயணித்திருந்தாலும், கதை சொல்லியாக இவரை கை காட்டலாம்.
ஸ்ரீதேவி எனும் நீர்வீழ்ச்சியை தாங்கக்கூடிய ஒரே நடிகர் கமல்தான், என மூன்றாம்பிறைக்கு விள்க்கம் அளித்தார்.
‘பொன்மேனி உருகுதே’ எதற்கு என்பது மட்டும்தான் விளங்கவே இல்லை.
சில்வர் ஸ்கிரீனுக்கு இவர் தந்த ‘நீங்கள் கேட்டவை’ யும் அதே ரகம்.
முதுமை என்பது ரணமா, ரசிக்கவா என்பதே தெரியாத போழ்து, நாம் இறப்பை பேசியாக வேண்டி இருக்கிறது.
திருமணமாகி நான் பார்த்த....சாரி, நாங்கள் பார்த்த முதல் படம் ‘ராமன் அப்துல்லா’.
அந்த வகையில் பாலு என் வாழ்வில் !
Comments