பார்த்திபன் கனவும், பால்பாயிண்ட் பேனாவும்!

எனக்கொரு கனவு இருக்கிறது..என்றொரு உரையின் ஆரம்பம் நினைவுக்கு வரலாம், 

தப்பில்லை. 

ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அது ஒரே கனவாக த்தான் இருக்கிறதா என்பதே இக்கட்டுரையின் சாரம்.

அதாவது, எனது சின்ன வயசில் எனது கனவு, தமிழாசிரியர் ஆவது. ஆனால் எனது பத்தாம் வகுப்பில் வாராவாரம் நடக்கும் ‘நீதிபோதனை’ பிரிவேளையில் ‘இனிமேல் நீங்க, தொழில்கல்வி அதாவது ஐ.டி.ஐ. அல்லது பாலிடெக்னிக் படிச்சாத்தான் சம்பாதிக்க முடியும்’ என மறுபடி மறுபடி மருந்திடப்பட்டு மனசு மாறி ‘துகிலியல் தொழில் நுட்பம்’ படிக்கலானேன்.


அப்புறம், மட்டுமல்ல, இன்றைய வரைக்கும் அதுதான் எனக்கு சாப்பாடு போடுகிறது.

சரி, கனவு என்ன ஆச்சு?

அங்கேதான் இந்த பால்பாயிண்ட் மேட்டர் வருகிறது.

வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு வளைவும்,நெளிவும் நமக்கு பாடம் சொல்கிற மாதிரி, பால்பாயிண்ட் பேனாவும் ஒரு பாடம் சொல்கிறது. கற்றுக்கொள்ளலாம், தப்பில்லை,

எழுதுகிற ஆர்வம் வருகையில், பால்பாயிண்ட் பேனாவை எடுத்து ஒரு அழுத்தம் கொடுத்து, எழுதுமுனையை வெளியே வரவிட்டு பயன்படுத்துகிறோம். அப்படித்தான் நமது கனவும். வாய்ப்பு கிடைக்கையில் அந்த ஆர்வத்தை வெளியேவிட்டு விளையாடிப்பார்க்கலாம்.

வாய்ப்பு மறுக்கப்படுகையில்....மறுபடி ஒரு அழுத்து. நமது கனவும், பேனாவின் எழுது முனையும் உள்ளே. வெளியே பிரஷர் இருந்தால் என்ன செய்வதாம்?
இதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்து பார்க்கலாம்,பார்க்கிறோம்.

நாம் ஏற்றுக்கொண்ட பாதையில் நமது பழைய கனவினை செயல்படுத்திப்பார்க்க வழியே இல்லை, என்ன செய்ய?

பணம்,குடும்பம்,பிரச்சினைகள், குழந்தைகள், அலுவலகம், ...இப்படி பாதையோ மாறிப்போச்சி. என் கனவினை என்ன செய்ய?

பழங்கனவாய்ப்போன என் லட்சியம்.....? இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சுமப்பது?



மீண்டும் பேனாவைக் கவனியுங்கள்,


அது ஒத்துவராத ரீபிளை மாற்றிக்கொள்கிறது.

Comments

Popular Posts