காதலாகி ...கசிந்து !

எதுக்கு இந்த நேரத்தில்?

தெரியவில்லை, ஆனால் எழுதத் தோன்றுகிறது.

அவரை முதன் முதலில் சந்தித்த போது, "வாங்க வைப்ரண்ட் வேலுமணி" என்று எனக்கு புரியாத ஆங்கிலப் பதத்தில் வரவேற்றார்.



பாராட்டுகிறார் என்று மட்டும் புரிந்தது.

"நீங்க ரொம்ப லேட்டு" என்றார் பொதுவாக - நான் எப்போது கால விரயம் செய்பவனல்ல.

பிற்காலத்தில் என்னிடம் பிடித்த / பிடிக்காத குணமான  என் 'நேரக் கொள்கை ' யே இருவருக்கும் பொதுவானதாக இருந்தது.

அவர் சொன்னது -ஜே.சி.ஐ. இயக்கத்திற்கு என்று- பிற்பாடு உணர்ந்தேன் 

ஒரு அறிமுக உரை எழுத எத்தனித்த போது,"சார் ( அவர் என்னிலும் இளையவர் என்றாலும் ,
இப்படியே அழைப்பது என் வாடிக்கையாகி விட்டது)  இதை இப்படி எழுதலாமா என கேட்டதற்கு
 "இங்க பாருங்க இந்திய பாரளுமன்றம் தராத சுதந்திரத்தை இந்த ஜே.சி.ஐ. அமைப்பு உங்களுக்கு தருது. நீங்க உங்க மனசில நினைசத்தை எழுத இதை விட  வேறு சரியான இடம் கிடையாது" என்றார். கேட்கணுமா?


நான் பேசியதையோ , எழுதியதையோ முறையே கேட்டாளும்,படித்தாலு யும் உடனே  அழைத்தோ , சம்மந்தப் பட்ட இடத்திலோ இருந்து கமெண்ட் கொடுப்பது அவர் பாணி .

அது ' நல்லாருந்திச்சி ' என்றோ , 'சூப்பர்' என்றோ  அளவீடுகளில் இராமல் , 'கேட்கணுமா?', என்றும், 'பட்டைய கெளப்பிட்டீங்க ' என்பது மாதிரியும் superlative அடைமொழியாய் இருக்கும் 

'பாக்கியராஜ் மாதிரி ' என்று அவரை என் நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கிறேன் .

 தன்னை தானே நக்கல் அடித்து பேர் வாங்கிக் கொள்வதில் புத்திசாலி மட்டுமல்ல.......சொல்லவந்ததை சிக்கலான காமெடிகளால் 
கொஞ்சம் காம நெடிகளொடு  கலந்து தருவதிலும். .....சந்தோஷம் என்றும் அவர் பேச்சில் .

ஒரு சமயம் நான் எனது 'அம்மா'  கவிதையின் தாக்கம் என்னுடன் இல்லாத எனது அப்பா வரை சென்றது பர்றி 
சற்றெ தழு தழு த்து பேச..." யோவ் என்னையா இது, உண்னை கல் நெஞ்சன்னு நினைசிருன்தேன், இப்படி கலஙறெ .என்ற போதுதான் என் பிம் பம அவர் மனதில் எப்படி இருக்கிறதென்பது புலப்பட்டது.

இயக்கத் தேர்தலில் அவர் பின்னடைவு கண்டபோது , அவருக்கே நான் எழுதிய கவிதை , படித்தவர்களியெல்லாம் அழ வைத்தது 
என்பதில் எனக்கு பெருமை ஏற் படவில்லை . மாறாக அதிலும் ஒரு கிரியேட்டிவிட்டியை கண்டு பாராட்டிய  கலைஞ்னை  எனக்கு அந்த சம்பவம் அறிமுகம் செய்தது.

தனக்கு பின் 'காமெடிப் பேச்சிற்கும் , எழுத்திற்கும் '  நான் சரியானவன்  என்பதை அவர் உணர்ந்ததை அவர் எனக்கு செய்த சிபாரிசுகளில்  
கொண்டேன் .

முகத்திலும், சிந்தனையிலும்  சிரிப்பை எத்தனை பேர்  சேர்ந்தாற்போல் வைத்துக் கொள்ள முடிகிறது ? ( எனக்கு முடியாதுப்பா ?)

அது சிலருக்கு மட்டுமே  வாய்க்கிறது .....!


ஆர் . எஸ். பி ர பு   அப்படி  ஒருவர்  மட்டுமல்ல ,   அவர்களில்  ஒருவர்  கூட !

Comments

Popular Posts