கூடா நட்பு

நட்புகளுக்கு வாழ்த்து சொல்வது எளிதா என்ன?
பள்ளியில் என்னோடு சத்துணவை பகிர்ந்து கொண்ட, நக்கல் நாயகன் Elango F Care,
MCR ரிக்சன்,
பர்ஸ்ட் ரேங்க் கணேசன் ( எங்கப்பா இருக்கே ?), மஞ்சுளா ( ஏன் ரொம்ப ஒல்லியா இருக்கே?), கற்பகம் ( இன்னுமா கல்யானம் ஆகலை ?)
அன்புச்செல்வி ( இப்போது ஆசிரியை )
மேல் வகுப்பில் என் எலும்பும், சதையுமாய், ( எப்போ புது சட்டை தைத்தாலும், ஹாஸ்டலில் என்னோடு பரிமாறிக்கொள்ளும்)Singara Velan
23 வருடங்களுக்கு முன் சக பஸ் பிரயாணியாக ( SMBT திருப்பூர்- ஈரோடு ) அறிமுகமாகி, குடும்ப உறுப்பினராக , என் திருமணத்தன்று 10,000 ரூபாயை நான் கேட்காமலேயே வழங்கி, இன்னும் அதே வாஞ்சையை , முக மகிழ்வை காக்கும் Muruga Elango ...
master of all subject என்று நானே கூச்சப்பட என்னை நண்பர்கள் புகழ்ந்தாலும், இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று நான் வியக்கும் Erode Natarajan Myilvaganan என் வியத்தகு(ம்) அனுதாபி.
JCI ஆலமரத்தின் நிழலில் என் ஆசுவாசம் அல்லது என் உயர்வு உண்டெனில் அதற்கு வழி காட்டிய 'அண்ணே' எங்கிற வார்த்தை தாண்டி இன்னும் என்னை அழைக்க மறக்காத, இளைய எனக்கும் சில விசயங்களின் எடுத்துக்காட்டு Dhanavel Arumugam
JCI யில் கிடைத்த இன்னுமோர் நட்பு வைரம் K Karikolraj சில விஷயங்களில் எனக்கு அவர், சில விசயங்களில் அவருக்கு நான்......உதவியும், எடுத்துக்காட்டுமாய் ! அவரை தாண்டி என்னையும் தன் மகனாய் (?) கருதும் அவரது தாய், என் மனைவியை தன் மகளாய் நினைப்பது நகைமுரண். முன்னம் நான் சொன்னபடி அன்பு ராட்சசி எனும் அவரது தங்கை ப்ரியா ( எனக்கு மாமியார் பொசிஸனில் தற்போது )
அத்தனைக்கும் மேலாக, 1986 இல் என் சக வகுப்பு தோழனாகி,அத்தனை ரசனைகளிலும் ஒத்த துணையாகி, பின்னர் வேலை நிமித்தம் நான் செய்த மிகச்சிறிய உதவிக்காக என்னை தொழில் அதிபர் எனும் நிலைக்கு ஆக்கி, எம் இரு் குடும்பங்களுமே இன்னும் பிறப்பால் சொந்தம் போல உறவு காத்து, ....என்னோடு இன்னும் அன்பு காத்து, நண்பன் எனும் அடைமொழியையே தன் அடை்யாளம் ஆக்கிக்கொண்ட........Sadaiyappan Sundararajan Astro
நீயும், நானும் ஆராகியரோ எனும் கூற்றுக்கு ஏற்ப, தமிழ் சினிமா காதலர் மாதிரி சண்டையில் ஆரம்பித்து, என் மனைவி தன் சொந்த தம்பியாய் நினைக்கும், என்னிலும் அறிவு மேம்பட்ட ( நான் சாதாரணமாக யாரையும் அப்படி ஒத்துக்கொள்ளவே மாட்டேன் ) , என்னோடு பல கருத்து ரீதியான மாறுபாடுகள் உண்டெனினும், அன்பில் மாறு பாடு காட்டாத Ramamoorthy Sundaram
jci தந்த இன்னொரு இறுதி நட்பாயினும், உறுதி நட்பு....TirupurJc KM Suresh Babu. JCI தாண்டி, தொழில், தொழில் தாண்டி குடும்பம் என் கூடிய நட்பு. நீங்க வந்தாத்தான் அண்ணா விததமா சமைக்க தோணுது எனும் Vanitha Suresh, ஊறுகாய் வச்சுக்கிட்டீங்களா, இந்த கீரை நல்லாருக்கும் என்று உண்ணீர் உண்ணீர் என உவந்தூட்டும் அவர்து அப்பா ( அந்த கெட்டின் தயிர்....ம்ம்ம்ம்)..
இன்னும் நூறு பேரை நான் எழுதனும்........அவ்ர்களுக்கு எப்படி வெறுமனே நண்பர் தின வாழ்த்து சொல்வதாம் ? யோசிக்க டைம் வேணாமா?

Comments

Popular Posts