மனம் வரவில்லையே தோழி!

1997...
பிடித்திருக்கிறதா என்றுதான் கேட்டார்கள்...
ஏன் என்று கேட்கவில்லை.
கேட்டிருந்தால் சொல்லியி்ருப்பேன்.
'தெரியலை...ஆனா, புடிச்சுருக்கு'.
என்னை மணங்கொண்ட நாள்முதல் என் மனங்கொண்டாள்.
98-இல் என்மீதான எல்லாச் சாபங்களையும் பொய் எனக்காட்டிட 'சௌந்தர்யனை' ஈந்துவந்தாள்.
அவன் வளரவளர அவளும் மலர்ந்தாள்.
பெண்பிள்ளை வேணுமெங்கிற ஆசையில் பெற்்றெடுத்தோம், 'கலாநிதி' என்கிற இன்னொரு கனியை.
என் எல்லா பெருமைகளையும் அவளே சாதித்தாள்.;
என் எல்லா ஆசைகளையும் என்னோடே
சோதித்தாள்.
அவள் பெயர் சொல்லுமிடமெல்லாம் என் பெயரும் சேர்த்திசைத்தாள்.
வாழ்விலும், தொழிலிலும் உடன் தோள்கொடுத்தாள்.
நான்கு ஆண்டுகளாய் என் தாயார் நோய் படுக்கையில்....
அவளே தாயானாள்....சிசுவானாள்....அழுதாள்..கோபித்தாள்...எளிய செவியாய் இதத்தனையும் செய்தாள்.
அன்னையர் தினம் தாண்டி அவ்ளையும் வணங்கினால்தான் என்ன?
பிறந்த நாள் வாழ்த்துக்களை வெறுமனே சொல்லித்தொலைக்க மனம் வரவில்லையடி.....தோழியே !

Comments

Popular Posts