கட்சி அழைக்குதடா......

கலிகாலம் பிறந்தததடா,
கட்சி அழைக்குதடா, காசால் பொழைச்சுக்கடா.

மேதை, பாதை எல்லாம் போதை ஆனதடா,
அறிஞர், கவிஞர் எல்லாம் கலைஞ்சே போச்சுதடா,
புரட்டல்தான் உன்னை புரட்சிக்கு அழைக்குமடா,
தத்துபித்துதான் தலைமையாய் ஏற்குமடா,
கட்சி அழைக்குதடா, காசால் பொழைச்சுக்கடா.

பூச்சும், பேச்சும்தான் பூவுலக தாயாம்டா,
பொய்யும் மையும்தான் போகுமிடம் திறக்குமடா.
கேப்டனாய் இருந்தாலும் புரட்சிப்புயல் தாக்குமடா,
சாப்டான ஆளு உன்னை சாப்பிட தயங்குமாடா?
கட்சி அழைக்குதடா, காசால் பொழைச்சுக்கடா.

வளராத‘மதி’ எல்லாம் வாய்திறந்து பேசுமடா,
வளர்ந்த மதி உள்ளவனை தளர்ந்த்தென ஏசுமடா,
கோகுல மந்திராக்கள் கோஷ்டியில பேசுமடா,
நாஞ்சில் தத்துவங்கள் நெஞ்சில் முட்டுமடா.
கட்சி அழைக்குதடா, காசால் பொழைச்சுக்கடா.

வென்னீர் வயக்காட்டில் வேகாம வெந்த்தெல்லாம்
பன்னீர் பணக்காட்டில் பாயாம பாயுமடா
எடுபுடி வேலையெல்லாம் எக்ஸ்பர்ட்டா நீ செஞ்சா
எடப்பாடி ஆகிடலாம், எப்படியும் ஜெயிச்சிடலாம்.

கலிகாலம் ஆச்சுதடா, பழியெல்லாம் பழகிக்கடா

கட்சி அழைக்குதடா, காசால் பொழைச்சுக்கடா

Comments

Popular Posts