மீண்டும் நாசமாய் போனோம்

பணத்தை வங்கியில் போட்டு வைக்கிற அறிவு நமெக்கெல்லாம் எப்போது வந்தது?

எவனாவது திருடனை டவுன் பஸ்ஸில்பேட்டியெடுத்த பின்னர் தானே?

ரெண்டு மூணு திருட்டு பார்த்தபின் வங்கியில் பணம் போட்டொம்.
80 களில்தான் நாம் வங்கியில் வரிசை போட்டோம். காலை பல்லுவிளக்கியவுடன் போனால் மதியசோத்துக்குத்துக்த்தான் வீடு. அப்படி க்யூ.

பின்னர் லெட்ஜர் பார்த்து கூப்பிட சுணங்கி 'டெல்லர் முறை' வந்தது. இதுக்கே 1990 ஆரம்பித்துவிட்டது. ஐயாயிரம் வரை எளிதாய் நேராய் கவுன்டருக்கே போய் பணம் எடுக்கலாம்.

ராஜிவ் காந்தி கொண்டுவந்த க்ணிணிமயத்தால் நாமே பாலன்ஸ் பார்க்கலாம்...வங்கியிலேயே. கம்யூனிகேசன்...ஊரெல்லாம் ஒரு ரூபா போன் என மைக்கேல் பெரைரவின் தய்வு.
தனி கம்ப்யூட்டர் தந்தார்கள்...நம்மாளுக அதற்கும் க்யூ நின்றார்கள்.

ICICI மாதிரியான கஸ்டமர்களுக்கு வேலை செய்யும் வங்கிகள் வந்தன. வரிகைகள் கரைந்தன.
ATM வந்து இன்னும் எளிதாக்கியது. வங்கிக்கு பணத்தேவைக்கு போக வேண்டாம். 'சிட்டி பேங்க்' போன்ற வகையறாக்கள் வங்கிப்பரிவர்த்தனைக்கு தனியாக சார்ஜ் போட்டு பயப்படுத்தினார்கள்.

அப்புறம் ஏ.டி.எம்.தான் எல்லாமே. அங்கேயே பேலன்ஸ் பார்த்து, ட்ரான்ஸ்பர் செய்து, பணம் போட்டு, ........கார்டும் கையுமாய் அலைந்தனர் செப்புமொழியார் அத்தனை பேரும்.
'ஆன் தி வே'யில் பணம் எடுத்தே நாமெல்லாம் ஆக்ராவரைக்கும் பொய் வந்தோம். பாதுகாப்பும் கூட.

எவர் கண் பட்டதோ.......கலியுகத்தின் கடேசி பிரம்மாவாய் மோடி காலத்தில் மீண்டும்கற்காலத்துக்கே போய்விட்டோம். மறுபடி பல்லு விளக்கியும் விளக்காமலும் வரிசையில் தமிழ்கூறும் நல்லுலகம்......... நிற்க !

Comments

Popular Posts