வரம்




நீ பிறந்ததோ ராமேஸ்வரம் !
உன்னை பெற்றதே இந்த தேசம் பெற்ற வரம் !!

மசூதிகளின் மகனாய் நீ தவழ்ந்திருந்தாலும்
விபூதிகளின் மீது உனக்கு விமர்சனமில்லை !

அத்தனை மதங்களும் உனக்கு சமம் –
எனவே தான் ‘மொகல் கார்டனில்’ எப்போதும் உன்முகம் !

எம்.ஜி.ஆர். போன இடத்துக்கு பின்னொரு நாள் நம்பியாரை அனுப்பினோம் ;
அவர் அவரின் ரசிகன் என்பதால் !
MSV போன இடத்துக்கு எப்போதோ  SLV அனுப்பிவிட்டாய் –
அது நீ இசை ரசிகன் என்பதாலா?

‘மக்கு நீ’ என மறுதலிக்கப்பட்டவர்களும் உன்
அக்கினி சிறகுகளால் ஆறுதல் பெற்றார்.

APJ  என்கிற உன் பெயரை சாதாரண
சாக்பீசால் எழுதுகிற சிறார்களும்
ஆபீசு போகலாம் என்கிற கனவுகளை நீ கொடுத்தாய் –
இல்லை நீ படைத்தாய் !!

பாவங்களை கழுவிய உன் மண்ணில்தான்
சாபங்களின் சக்தியை புரிந்து கொண்டோம்.
இந்திய சுதந்திரம் பெற்று தந்ததால் அன்று – அவர் – மகாத்மா !
டெக்னிகல் சுதந்திரம் பெற்றுதந்ததால் இன்று நீ மகாத்மா!


உண்மையே சொல்லி தந்த மெய்ஞான மகாத்மாவும்
உண்மை அறிவியலை சொல்லித்தந்த விஞ்ஞான மகாத்மாவும்
இருக்கிற கூட்டு கலவையால்
புன்னகை தேசமாய் புறப்படப் போகிற
புதிய இந்தியாவின் 20-20 மேட்ச் இனிமேதான் இருக்கிறது.

இனி எல்லாமே ‘மேல்’ தான் இருக்கிறது.

Comments

Popular Posts