அர்த்த ராத்திரி !
நேற்றைய இரவின்
அர்த்த ராத்திரியில்
ஈரோட்டு வானத்தில்
இடியும் மழையும்
இஷ்டத்திற்கு கொட்டியது !
என்னவென்று புரியாத எனக்கு
எட்டிய பதில் இது.
ஆழ்மனதின்
ஆனந்தக்கண்ணீரை மழையாய்....
நிம்மதிச்சிரிப்பின் சிரிப்பின்
கட்டவிழ்ந்த கணத்தை இடியாய்
இறக்கி ஓய்ந்த
வானம் எழுதிய காதல் வரிகள்.
ஆம்...................
zone -17 க்கு
நேற்றைய ராத்திரியே அர்த்த ( முள்ள ) ராத்திரி !
Comments