கண்ணுக்குக் கண்


அஜ்மல் கசாப்புக்கு (அப்பாடா) ஒரு வழியாக மரண தண்டனை கொடுத்தாகிவிட்டது. 

இது ஒன்றுமறியா அப்பாவி மக்கள் மீதும், இந்திய நாட்டின் சின்னமான தாஜ்விடுதி மீதும் நடத்திய தாக்குதலுக்கு தாமதமான தண்டனைதான், ஆனால் சரியான தண்டனையே!

காலையில் இது பற்றி புதியதலைமுறையில் செய்தி சொல்லிவிட்டு சில ரிடம் கருத்து கேட்டார்கள்

மார்க்.கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்னன் இது சரியே என்றார்

வேறு ஒரு சமூக ஆய்வாளர் இது தவறு என்றார்.

அதாவது பல நாடுகளில் கைவிடப்பட்ட  இந்த தண்டனை இந்தியா பிடிவாதமாக வைத்துக் கொண்டுள்ளது என்பது அவர் கருத்து. முஸ்லிம் நாடுகளில் தண்டனை எப்படி இருக்கிறது என்பது அந்த சமூக ஆய்வாளருக்கு எப்படி தெரியாமல் போயிற்று?

கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்கிற விதமான அவர்களின் தண்டனை முறையை ( நாற்சந்தியில் கல்லால் அடிப்பது, தலையை வெட்டுவது, கை விரல்களை வெட்டுவது, பிரம்பால் அடிப்பது,சவுக்கால் அடிப்பது....) நாம்கூட ‘இதுதான் தண்டனை, இப்படி செஞ்சாத்தான் மறுபடி தப்பு பண்ன மாட்டான்’ என ரசிப்பது எதற்காம்?

யூட்யூப் பக்கம் போங்க சமூக ஆய்வாளரே..... 

பாகிஸ்தான் செய்யும் எந்த ஒரு இந்தியக் கலவரத்துக்கும் இதே மாதிரி தண்டனையை உடனே ( இது கூட 2008-ல் நடந்து, 2010 –ல் நீதி விசாரணை முடிந்து, 2012-ல் தான் தண்டனை கொடுக்கிறோம். நமது நீதி துறை நிச்சயம் பாராட்டப் பட வேண்டியதே....) கொடுத்தால்தான் நம் மீது கொஞ்சமாவது பயம் இருக்கும், காஷ்மீர் பிரச்சினை கொஞ்சம் குறையும்.

Comments

Popular Posts