டெசோவும்....சில புத்திசாலிகளும் !
நம்ம நாடு ஏன்
உருப்படல்ன்னு ரொம்ப யோசிக்கறவங்க பல பேரு.
யோசிக்காம அடுத்தவங்கள
குறை சொல்றவங்க அதைவிட பல பேரு.
இவங்க தான் சிந்தனாவாதிகள்
எனும் தனி குரூப் !
இலங்கைத் தமிழன்
காப்பாத்தப் படலேன்னு கத்துவாங்க.
யாராவது ஏதாவது
பண்ணா, அது கூடாது…..அத ஏன் இப்பிடிப் பண்றீங்க……இதை ஏன் அப்பிடிப் பண்ணக் கூடாதுண்ணு
கூப்பாடு போடுவாங்க!
இங்க ‘டெசோ’ நடத்தறதுக்கு
இலங்கைல உருவ பொம்மை எரிச்சாங்களாம்.
அதுக்கு இங்க ஒருத்தர்
நல்ல எண்ணத்தோட எழுதறார், ‘இது முன்னமே தெரிஞ்சிருந்தா வைகோ,சீமான் எல்லாம் கூடச் சேர்ந்து எரிச்சிருப்பாங்க’
ளாம்.
தெரயுதா ஏன் தமிழன்
மட்டும் எங்க போனாலும் ஒதை வாங்கரான்னு?
ஒத்துமை…..அது.....
அதுதான் இங்க இல்லை. அது இருக்கறவன் சேர்ந்து உதைக்க வரான் நாம வாங்கிட்டு வரோம். க்ரெக்ட்
Comments