என் மனைவியென்றானவள் !

எனக்கென வருகையில்

உன் அடையாளம்

அத்தனையும் தொலைத்தவள் நீ !

 

உன்

உள்ளத்தை மட்டுமல்ல -

உன் இனிஷியலையும்

எனக்காக தாரைவார்த்தாய் !

 

உன் இல்லம் விட்டு வந்ததோடு,

என் இல்லமே உன்

முகவரியென்று கொண்டாய் !

 

உன் கனாவில் பல இரவுகள் இருந்திருக்கலாம்

ஆனாலும் ஒரு முதல் இரவை எனக்கானதாக்கினாய்!

 

*   *     *     *     *     *     *

உனக்கென நான் என்ன கொடுத்தேன்?

 

என்னையொத்த சிறு பிள்ளையும்

சில

எச்சில் முத்தங்களும் தவிர?

 

-து.வேலுமணி / ஈரோடு 9600790033

Comments

நல்லாயிருக்கு தல!

Popular Posts