கோர்ட் & போலீஸ்

ஐகோர்ட்டிற்கு மூன்று ஷிப்ட்டாக போலீஸ் பாதுகாப்பு தரப்போராங்களாம். இளம் வயது போலீசாரை விட்டுட்டு, வயதான போலீசாரை மட்டும் பணியில் வைக்கறாங்களாம். சென்னை ஐகோர்ட்டில் நடந்த மோதல் எதிரொலியாக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் உள்ளனர். இந்நிலையில், தமிழக அரசுக்கு ஐகோர்ட் பதிவாளர் எழுதிய கடிதத்தில், "பிப்ரவரி 19ம் தேதிக்கு முன் வழங்கியது போன்றே ஐகோர்ட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கேட்டிருக்கிறார்.

அதைப் பரிசீலித்த அரசு, ஐகோர்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், வட சென்னை இணைக் கமிஷனர் ரவி, பூக்கடை துணைக் கமிஷனர் பெரியய்யா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. "ஐகோர்ட் தடியடி சம்பவத்திற்குப் பிறகு, போலீசாருக்கு எதிராக வக்கீல்களின் மனநிலை உள்ளது. ஐகோர்ட்டிற்கு வெளியே போலீசாரை நிறுத்தலாம். கோர்ட்டிற்குள் போலீசாரை அனுமதித்தால் சிக்கலாகலாம்' என ஆலோசிக்கப்பட்டது. "முன் போலவே ஐகோர்ட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 10 நாட்களுக்கு சோதனை முறையில் எட்டு மணி நேரத்திற்கு ஒரு "ஷிப்ட்' என 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட் பாதுகாப்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. ஐகோர்ட்டிற்குள் தடியடி நடத்திய இளம் வயது ஆயுதப்படை மற்றும் சிறப்புப் படை போலீசாரைத் தவிர்த்து, சட்டம் ஒழுங்கில் பணியாற்றும் மூத்த ஏட்டுகளை ஐகோர்ட்டிற்குள் பணியில் அமர்த்த போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.ந

நாட்டு நலன் என்கிற விஷயம் பின் தள்ளப்பட்டு, சுய நல தலை தூக்கினால் என்னாகும் என்பதற்கு வக்கீல்களின் இந்த விபரீதப் போக்கு சாம்பிள்.

எல்லோரும் கோர்ட் சொல்வதைக் கேட்கனும்,ஆனால் வக்கீல்கள் கேட்க மாட்டார்கள்.

என்ன கொடும கடவுளே இது?


Comments

Popular Posts