வேலையை பாருங்க.....!
-விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ( எங்க?எப்போ? எப்பிடி?)
-வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.( எதுக்கு?)
-சில்லறை விற்பனை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது.( இது அரதப் பழசு)

-தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை மாதம் ரூ 10,000 ஆக உயர்த்த வேண்டும்.( கதையப் பார்ரா...)
-தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் வரை உயர்ந்து விட்ட வேலை நாளை 8 மணி நேர வேலை நாளாக மறுபடியும் மாற்ற வேண்டும்.( அதுவே சட்டமாயிடுச்சு)
-ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்
( கேசு போட்டுகிட்டுத்தான இருகோம்னு சொல்வாங்க)

-அமைப்பு சாரா துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.( அமைப்பே சந்தேகமா போயிட்டு இருக்காம்)
-பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.( அமைச்சரை சந்திச்சு பேசுனீங்களா?)
-வங்கிகளை நிதிச் சந்தையில் செயல்பட அனுமதிக்கக் கூடாது.
தனியார் நிறுவனங்களை வங்கிகள் ஆரம்பிக்க அனுமதிக்கக் கூடாது.( சிதம்பரம் இப்ப நிதி துறைல இல்ல...)

-பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.( போங்கப்பா...போயி புள்ளங்கள படிக்க வையிங்க...)
என்ற கோரிக்கைகளுடன் இன்று வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது...தெரியுமா ஜனங்களே?
Comments