தா.பா.வின் தமாஷ்


தா.பா.வின் தமாஷ்
அ.தி.மு.க., தேர்தல் குழுவினரான மதுசூதனன், பன்னீர்செல்வம், ஜெயக்குமார், தம்பிதுரையுடன் இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் குழுவினர் தா.பாண்டியன், பழனிச்சாமி ஆகியோர், தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.அ.தி.மு.க., கூட்டணியில் ஆறு தொகுதிகளை தனது கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது


தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் அணியாக நாங்கள் இருக்கிறோம். முதல் கட்ட பேச்சுவார்த்தையை துவங்கி யுள்ளோம். போட்டியிடும் தொகுதிகள் நிச்சயம் செய்த பின் அறிவிக்கப்படும். தேர்தல் பிரசார தேதியும் அறிவிக்கப்படும்.பா.ம.க., எங்கள் அணிக்கு வருமா? என்பதை ராமதாசிடம் தான் கேட்க வேண்டும். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில் முறியடிக்கும் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளோம். தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம். இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

இதில் தமாஷ் எதுவென்று படிக்கிற உங்களுக்கே தெரிஞ்சுருக்கும்???????

Comments

Popular Posts